சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.099
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இன்று நன்று, நாளை நன்று பண் - நட்டராகம் (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=CrD_aLf3ntE |
4.051
திருநாவுக்கரசர்
தேவாரம்
நெற்றி மேல் கண்ணினானே! நீறு பண் - திருநேரிசை (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=jI9dsAR0N9g |
5.078
திருநாவுக்கரசர்
தேவாரம்
சங்கு உலாம் முன்கைத் தையல் பண் - திருக்குறுந்தொகை (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=mJZCB9wqOjk |
6.081
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் தலம் சேர் நெற்றி பண் - திருத்தாண்டகம் (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=SggFtlZ_vRU |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.099  
இன்று நன்று, நாளை நன்று
பண் - நட்டராகம் (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; (திருத்தலம் அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )
இன்று நன்று, நாளை நன்று என்று நின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின்! மின் தயங்கு சோதியான் வெண்மதி, விரிபுனல், கொன்றை, துன்று சென்னியான் கோடி காவு சேர்மினே! | [1] |
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர், நல்லது ஓர் நெறியினை நாடுதும், நட(ம்)மினோ! வில்லை அன்ன வாள் நுதல் வெள்வளை ஒர் பாகம் ஆம் கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடி காவு சேர்மினே! | [2] |
துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர், தக்கது ஓர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்! அக்கு அணிந்து, அரைமிசை, ஆறு அணிந்த சென்னி மேல் கொக்கு இறகு அணிந்தவன் கோடி காவு சேர்மினே! | [3] |
பண்டு செய்த வல்வினை பற்று அறக் கெடும் வகை உண்டு; உமக்கு உரைப்பன், நான்; ஒல்லை நீர் எழுமினோ! மண்டு கங்கை செஞ்சடை வைத்து மாது ஒர்பாகமாக் கொண்டு உகந்த மார்பினான் கோடி காவு சேர்மினே! | [4] |
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர், எழு(ம்)மினோ! பொன்னை வென்ற கொன்றையான், பூதம் பாட ஆடலான், கொல் நவிலும் வேலினான், கோடி காவு சேர்மினே! | [5] |
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் எனப் பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை; காவல் மிக்க மா நகர் காய்ந்து வெங்கனல் படக் கோவம் மிக்க நெற்றியான் கோடி காவு சேர்மினே! | [6] |
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர், மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்மினோ! பூணல் வெள் எலும்பினான், பொன்திகழ் சடை முடிக் கோணல் வெண்பிறையினான், கோடிகாவு சேர்மினே! | [7] |
மற்று இ(வ்) வாழ்க்கை மெய் எனும் மனத்தினைத் தவிர்ந்து நீர், பற்றி வாழ்மின், சேவடி! பணிந்து வந்து எழுமினோ! வெற்றி கொள் தசமுகன், விறல் கெட இருந்தது ஓர் குற்றம் இல் வரையினான் கோடி காவு சேர்மினே! | [8] |
மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன்; செங்கண் மால், திசைமுகன், சென்று அளந்தும் காண்கிலா வெங் கண் மால்விடை உடை வேதியன் விரும்பும் ஊர், கொங்கு உலாம் வளம் பொழில், கோடி காவு சேர்மினே! | [9] |
தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும், பட்டு உடை விரி துகிலினார்கள், சொல் பயன் இலை; விட்ட புன் சடையினான், மேதகும் முழவொடும் கொட்டு அமைந்த ஆடலான், கோடிகாவு சேர்மினே! | [10] |
கொந்து அணி குளிர்பொழில் கோடி காவு மேவிய செந்தழல் உருவனை, சீர்மிகு திறல் உடை அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம் பந்தன தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.051  
நெற்றி மேல் கண்ணினானே! நீறு
பண் - திருநேரிசை (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; (திருத்தலம் அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )
நெற்றி மேல் கண்ணினானே! நீறு மெய் பூசினானே! கற்றைப் புன் சடையினானே! கடல் விடம் பருகினானே! செற்றவர் புரங்கள் மூன்றும் செவ் அழல் செலுத்தினானே! குற்றம் இல் குணத்தினானே! கோடிகா உடைய கோவே! | [1] |
கடி கமழ் கொன்றையானே! கபாலம் கை ஏந்தினானே! வடிவு உடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகத்தானே! அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள் செய்வானே! கொடி அணி விழவு அது ஓவாக் கோடிகா உடைய கோவே! | [2] |
நீறு மெய் பூசினானே! நிழல் திகழ் மழுவினானே! ஏறு உகந்து ஏறினானே! இருங் கடல் அமுது ஒப்பானே! ஆறும் ஓர் நான்கு வேதம்! அறம் உரைத்து அருளினானே! கூறும் ஓர் பெண்ணினானே! கோடிகா உடைய கோவே! | [3] |
காலனைக் காலால் செற்று, அன்று, அருள் புரி கருணையானே! நீலம் ஆர் கண்டத்தானே! நீள் முடி அமரர்கோவே! ஞாலம் ஆம் பெருமையானே! நளிர் இளந்திங்கள் சூடும் கோலம் ஆர் சடையினானே! கோடிகா உடைய கோவே! | [4] |
பூண் அரவு ஆரத்தானே! புலி உரி அரையினானே! காணில் வெண் கோவண(ம்) மும், கையில் ஓர் கபாலம் ஏந்தி, ஊணும் ஊர்ப் பிச்சையானே! உமை ஒரு பாகத்தானே! கோணல் வெண் பிறையினானே! கோடிகா உடைய கோவே! | [5] |
கேழல் வெண் கொம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே! ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன்? எந்தை பெம்மான்! மாழை ஒண்கண்ணினார்கள் வலை தனில் மயங்குகின்றேன்; கூழை ஏறு உடைய செல்வா! கோடிகா உடைய கோவே! | [6] |
அழல் உமிழ் அங்கையானே! அரிவை ஓர் பாகத்தானே! தழல் உமிழ் அரவம் ஆர்த்துத் தலை தனில் பலி கொள்வானே! நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள் குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே! | [7] |
ஏ அடு சிலையினாலே புரம் அவை எரி செய்தானே! மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே! ஆவடு துறை உளானே! ஐவரால் ஆட்டப் பட்டேன்! கோ அடு குற்றம் தீராய், கோடிகா உடைய கோவே! | [8] |
ஏற்ற நீர்க் கங்கையானே! இரு நிலம் தாவினானும், நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன், இவர்கள் கூடி ஆற்றலால் அளக்கல் உற்றார்க்கு அழல் உரு ஆயினானே! கூற்றுக்கும் கூற்று அது ஆனாய்! கோடிகா உடைய கோவே! | [9] |
பழக நான் அடிமை செய்வேன்-பசுபதீ! பாவ நாசா! மழ களியானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த அழகனே! அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும் குழகனே! கோல மார்பா! கோடிகா உடைய கோவே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.078  
சங்கு உலாம் முன்கைத் தையல்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; (திருத்தலம் அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )
சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர் பாகத்தன், வெங் குலாம் மதவேழம் வெகுண்டவன், கொங்கு உலாம் பொழில் கோடிகாவா! என, எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே. | [1] |
வாடி வாழ்வது என் ஆவது? மாதர்பால் ஓடி, வாழ்வினை உள்கி, நீர், நாள்தொறும் கோடிகாவனைக் கூறீரேல், கூறினேன்: பாடிகாவலில் பட்டுக் கழிதிரே. | [2] |
முல்லை நல்முறுவல்(ல்) உமை பங்கனார், தில்லை அம்பலத்தில்(ல்) உறை செல்வனார், கொல்லை ஏற்றினர், கோடிகாவா! என்று அங்கு ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே. | [3] |
நா வளம் பெறும் ஆறு, மன் நன்னுதல் ஆமளம் சொலி, அன்பு செயின்(ன்) அலால், கோமளஞ்சடைக் கோடிகாவா! என, ஏவள்? என்று எனை ஏசும், அவ் ஏழையே. | [4] |
வீறுதான் பெறுவார் சிலர் ஆகிலும், நாறு பூங்கொன்றைதான் மிக நல்கானேல், கூறுவேன், கோடிகா உளாய்? என்று; மால் ஏறுவேன்; நும்மால் ஏசப்படுவனோ? | [5] |
நாடி நாரணன், நான்முகன், வானவர் தேடி ஏசறவும், தெரியாதது ஓர் கோடிகாவனைக் கூறாத நாள் எலாம் பாடிகாவலில் பட்டுக் கழியுமே. | [6] |
வரங்களால் வரையை எடுத்தான் தனை அரங்க ஊன்றி அருள் செய்த அப்பன் ஊர், குரங்கு சேர் பொழில் கோடிகாவா! என இரங்குவேன், மனத்து ஏதங்கள் தீரவே. | [7] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.081  
கண் தலம் சேர் நெற்றி
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; (திருத்தலம் அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )
கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்; கல் மதில் சூழ் கந்த மாதனத்தான் கண்டாய்; மண்தலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய்; மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்; விண்தலம் சேர் விளக்கு ஒளி ஆய் நின்றான் கண்டாய்; மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்; கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே. | [1] |
வண்டு ஆடு பூங்குழலாள் பாகன் கண்டாய்; மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய்; பண்டு ஆடும் பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்; பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய்; செண்டு ஆடி அவுணர் புரம் செற்றான் கண்டாய்; திரு ஆரூர்த் திருமூலட்டானன் கண்டாய்; கொண்டாடும் அடியவர் தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே. | [2] |
அலை ஆர்ந்த புனல் கங்கைச் சடையான் கண்டாய்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனான் கண்டாய்; மலை ஆர்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்; வானோர்கள் முடிக்கு அணி ஆய் நின்றான் கண்டாய்; இலை ஆர்ந்த திரிசூலப்படையான் கண்டாய்; ஏழ் உலகும் ஆய் நின்ற எந்தை கண்டாய்; கொலை ஆர்ந்த குஞ்சரத் தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே. | [3] |
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய்; மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய்; புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய்; பூந்துருத்திப் பொய் இலியாய் நின்றான் கண்டாய்; அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்; ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்; குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே. | [4] |
வார் ஆர்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்; மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்; போர் ஆர்ந்த மால்விடை ஒன்று ஊர்வான் கண்டாய்; புகலூரை அகலாத புனிதன் கண்டாய்; நீர் ஆர்ந்த நிமிர்சடை ஒன்று உடையான் கண்டாய்; நினைப்பார் தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்; கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே. | [5] |
கடி மலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்; கண் அப்ப விண் அப்புக் கொடுத்தான் கண்டாய்; படி மலிந்த பல்பிறவி அறுப்பான் கண்டாய்; பற்று அற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்; அடி மலிந்த சிலம்பு அலம்பத் திரிவான் கண்டாய்; அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய்; கொடி மலிந்த மதில்-தில்லைக் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே. | [6] |
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய்; ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய்; கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்; காளத்திக் கற்பகம் ஆய் நின்றான் கண்டாய்; இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய்; என் நெஞ்சத்துள்-நீங்கா எம்மான் கண்டாய்; குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே. | [7] |
படம் ஆடு பன்னகக்கச்சு அசைத்தான் கண்டாய்; பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்; நடம் ஆடி ஏழ் உலகும் திரிவான் கண்டாய்; நால்மறையின் பொருள் கண்டாய்; நாதன் கண்டாய்; கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய்; கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்; குடம் ஆடி இடம் ஆகக் கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே. | [8] |